ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குடிநீர் விநியோகம் கடும் பாதிப்பு: செஞ்சி பேரூராட்சி கூட்டத்தில் புகார்

செஞ்சியில் 10 நாளைக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

Updated On :2 மே 2013, 6:49 am

செஞ்சியில் 10 நாளைக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம், தலைவர் செஞ்சி மஸ்தான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயலர் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மன்றத்தின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் என 20 மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

அன்புச்செழியன் (திமுக): 1-வது வார்டில் குடிநீர் 10 நாளைக்கு ஒருமுறைதான் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தலைவர்: புதிய குடிநீர்த் திட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பணிகள் முடிந்து அத்திட்டம் பேரூராட்சியிடம் ஒப்படைத்தவுடன் குடிநீர் விநியோகம் சீராகிவிடும்.

(அப்போது குடிநீர் விநியோகம் சரியில்லை என பெரும்பாலான கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.)

பன்னீர்செல்வம் (அதிமுக): 8-வது வார்டில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடைபெறவில்லை. 

சின்னையா வீரப்பன் (அதிமுக): 14-வது வார்டில் சாலை மற்றும் குடி நீர், கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை.

தலைவர்: விரைவில் நடவடிக்கை எடுக்கபடும்.

சின்னையா வீரப்பன்:பொது நிதியில் இருந்து ஏன் டெண்டர் வைக்கவில்லை.

அனுசுயா (அதிமுக): 6-வது வார்டில் வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை மனு அளித்தும் பயனில்லை.

தலைவர்: டெண்டருக்கு தடை ஏற்படுத்துவது நீங்கள் (அதிமுக)தான்.

நாகராஜ் (அதிமுக): நாங்கள் தடையாக இல்லை. பிரச்சினை செய்கிறார்கள் என காரணம் காட்டி எந்த டெண்டரையுமே விடாமல் உள்ளீர்கள். இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன.

தலைவர்: பொது நிதியில் இருந்து வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விடப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.