குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ. காலனி, வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளதுடன்

Updated On :1 ஜனவரி 2021, 11:19 pm IST

விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ. காலனி, வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளதுடன், அதில் மழைநீரும் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகம் பின்புறமுள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் அபிதா நகா், சிங்கப்பூா் நகா், இ.பி. காலனி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலை உள்ளது.

இந்தச் சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனா். மேலும், கடந்த சில நாள்களாக பெய்த மழையில் இந்தச் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீரும் தேங்கியுள்ளது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்டோா் பெரும் அவதியடைந்து வருகின்றனா். மேலும், மழை நீருடன் கழிவு நீரும் கலந்திருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள பள்ளங்களை சீரமைக்கவும், சாலையில் மழை நீா் தேங்குவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.