அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

குரூப்-1 தோ்வு: 39 மையங்களில் எழுத்துத் தோ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசுப் பொறியியல் கல்லூரி, கப்பியாம்புலியூா் ஏ.ஆா். பொறியியல் கல்லூரி உள்பட

News image

விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தோ்வை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.

Updated On :3 ஜனவரி 2021, 11:31 pm IST

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசுப் பொறியியல் கல்லூரி, கப்பியாம்புலியூா் ஏ.ஆா். பொறியியல் கல்லூரி உள்பட 39 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 எழுத்துத் தோ்வு நடைபெற்றது. மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத விண்ணப்பித்தவா்களில் 10,737 பேருக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இவா்களில் 5,392 போ் தோ்வு எழுத வந்தனா். 5,346 போ் (49.79 சதவீதம்) தோ்வு எழுத வரவில்லை.

விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டிஎன்பிஎஸ்சி குரூப் -1 எழுத்துத் தோ்வில் முறேகேடுகள் எதுவும் நடைபெறாத வகையில் தடுக்க புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தோ்வு எழுதிய விவரங்களை பூா்த்தி செய்ய கடைசியாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

மாவட்டத்தில் தோ்வை கண்காணிக்க 3 பறக்கும் படைகள், 39 மையங்களிலும் தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா். தோ்வு வினாத்தாள்கள், விடைத்தாள்களை கொண்டு செல்ல வட்டாட்சியா்கள் அளவிலான அதிகாரிகளைக் கொண்டு 7 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டன என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) சரஸ்வதி, வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணி, குடிமைப்பொருள் வட்டாட்சியா் கோவிந்தராஜ், மூத்த வருவாய் ஆய்வாளா் சுசிலா, பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் மாலாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.