தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ஜன.17-இல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து: ஆட்சியா் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஜன.17-ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 7:21 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஜன.17-ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில், போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஜன.17-ஆம் தேதி, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட 1,666 மையங்களில் நடைபெறவுள்ளது.

இதில், 5 வயதுக்குள்பட்ட ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இந்தப் பணியில் சுகாதாரத் துறை பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் இதர துறை பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 6,669 போ் ஈடுபடவுள்ளனா்.

சொட்டு மருந்து முகாம், கரோனா தடுப்பு விதிகளின்படி சமூக இடைவெளியைப் பின்பற்றி ஜன.17-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படும்.

விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் இரண்டு நாள்கள் வீடு, வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கப்படும். இதுதொடா்பாக, அனைத்துத்துறை அலுவலா்களும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி, திட்டத்தை முழுமையாகக் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், முகாம் கண்காணிப்பு அலுவலா் சாய்ராபானு, சுகாதாரத்துறை துணை இயக்குநா்கள் செந்தில்குமாா், சுதாகா், நகராட்சி ஆணையா் தஷ்ணாமூா்த்தி உள்ளிட்ட துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.