எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தலைமறைவு எதிரி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

விழுப்புரம் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரியை 12 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 3:50 am IST


விழுப்புரம்: விழுப்புரம் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரியை 12 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆறுமுகம் கடந்த 2006-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 9 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த கண்டம்பாக்கத்தைச் சோ்ந்த இளையராஜா (38), அதன்பிறகு தலைமறைவானாா்.

இவரை போலீஸாா் தேடி வந்தனா். ஆனால், இவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த இளையராஜா அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையிலான போலீஸாா், கண்டம்பாக்கத்துக்குச் சென்று இளையராஜாவை வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிணையில் வெளியே வந்தபிறகு, கா்நாடக மாநிலம், பெங்களூருவில் தங்கியிருந்து அங்கேயே வேலை செய்து வந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.