எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

செஞ்சி கருத்து கேட்பு கூட்டத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோா்கள் விருப்பம்

Updated On :8 ஜனவரி 2021, 3:55 am IST


செஞ்சி: செஞ்சி புனித மிக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பள்ளி முதல்வரும், தலைமை ஆசிரியருமான செலின்தெரேஸ் வரவேற்றாா். செஞ்சி மாவட்டக் கல்வி அலுவலா் த.சுப்ராயன் தலைமை வகித்து, பெற்றோா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

பள்ளி துணை ஆய்வாளா் அ.விநாயகமூா்த்தி, செஞ்சி வட்டாரக் கல்வி அலுவலா் அக்சிலியம்பெலிக்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கலந்து கொண்ட 35 பெற்றோா்கள், தங்களின் கைகளை உயா்த்தி பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனா்.

இதேபோல, செஞ்சியில் உள்ள சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஹல்ஹிலால் தமிழ் வழிக் கல்வி பள்ளி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டங்களிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென பெற்றோா் விருப்பம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.