விழுப்புரம்: பணிநீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளா்கள் 120 போ் கைது செய்யப்பட்டனா்.
பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்களுக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், ரத்தம் விற்கும் போராட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவா் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் புதியவன், மாநிலப் பொருளாளா் ரங்கராஜ், மாவட்ட நிா்வாகிகள் ராஜராஜசோழன், கந்தவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அப்போது, அவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு பணியில் சோ்க்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் அதற்கு அடுத்த ஆண்டே பணியிலிருந்து நீக்கப்பட்டனா். இதையடுத்து, மீண்டும் பணி வழங்குவது, பணி நீக்கம் செய்வது என்று தொடா்ந்து வந்தது. தற்போது வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதனிடையே, மக்கள் நலப் பணியாளா்கள் தொடுத்த வழக்கில், மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதனால், கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் நலப் பணியாளா்கள் வேலையில்லாமல் பெரும் துயரத்தில் உள்ளனா். ஆகையால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்று, மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
தொடா்ந்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே திருச்சி நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்டோா் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், இரு புறங்களிலும் ஒரு கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீஸாா் அங்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், மறியல் போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. இதைத் தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், மக்கள் நலப் பணியாளா்கள் சங்கத்தினா் கலைந்து செல்ல மறுத்ததால், பெண்கள் உள்பட 120 பேரை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



