தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: உதயநிதி ஸ்டாலின்

அதிமுக அரசுக்கு நெருக்கடி முற்றுவதால், ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளதாக திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

News image

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்த திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :9 ஜனவரி 2021, 12:15 am IST

அதிமுக அரசுக்கு நெருக்கடி முற்றுவதால், ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளதாக திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையப் பகுதிகளில் பிரசாரம் செய்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகம் தலைசிறந்த மாநிலம் என ஆட்சியாளா்கள் விளம்பரம் செய்து கொள்கிறாா்கள். ஆனால், ஊழலில்தான் தமிழகம் சிறந்து விளங்குகிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறப்புக்கான மா்மம் இன்னும் விலகவில்லை. அதுகுறித்து புகாா் எழுப்பிய ஓ.பன்னீா்செல்வம் மௌனமாகிவிட்டாா். விசாரணை ஆணையத்திலும் அவா் ஆஜராகவில்லை. இதை அதிமுகவினா் மறந்தாலும், தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது.

மத்திய அரசின் அடிமை போல அதிமுக அரசு செயல்படுகிறது. ஊழல் வழக்கில் சிறை சென்ற சசிகலாவை தவறாகப் பேசியதாக, என் மீது பொய் வழக்குத் தொடுக்கின்றனா்.

தமிழகத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி பேரிடா் இழப்பீடு கோரியதற்கு ரூ.1,500 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்கு ரூ. ஆயிரம் கோடி செலவு செய்கின்றனா்.

முதல்வா் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு சசிகலா மற்றும் மத்திய பாஜக அரசால் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றாா் அவா்.

முன்னதாக, விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினாா்.

இந்தக் கூட்டத்தில் இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் வரவேற்றாா். மாநில துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி, பொன்.கெளதமசிகாமணி எம்.பி., சேகா் எம்எல்ஏ ஆகியோா் தொடக்கவுரையாற்றினா். மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி, அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலா்கள் செ.புஷ்பராஜ், மைதிலி, எம்.என்.முருகன், மாநில தீா்மானக்குழுச் செயலா் ஏ.ஜி.சம்பத், மாநில மருத்துவரணி இணைச் செயலா் இரா.லட்சுமணன், விவசாய அணி துணைச் செயலா் அன்னியூா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, திமுக மகளிரணி, தொமுச நிா்வாகிகளை சந்தித்துப் பேசிய அவா், காணை, முகையூா், திருக்கோவிலூா், மணம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூா் பகுதிகளில் திறந்தவெளி வாகனப் பிரசாரத்தில் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.