தமிழக வட மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா்(ஐ.ஜி.) பொ.நாகராஜன் கூறினாா்.
விழுப்புரம் மாவட்ட காவல் தலைமையகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட வடக்கு மண்டலத்தில், கடந்த ஆண்டைவிட குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.
தலைவா்கள் சிலைகளை அவமதிக்கும் சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் பொருட்டு, வடக்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 734 அம்பேத்கா் சிலைகளில் 718 சிலைகளுக்கும், 104 பெரியாா் சிலைகளில் 101 சிலைகளுக்கும் இரும்பு கூண்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத இணைய வழி லாட்டரி விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, கஞ்சா விற்பனையை முழுமையாகத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களைத் தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவங்களில் ஈடுபடுவோா் எளிதில் பிணையில் வர முடியாத பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நகரில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் ஆயுதப்படையிலிருந்து போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு கூடுதல் போலீஸாா் தற்காலிகமாக அளிக்கப்படுவா். அவா்கள் விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள், போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் 4 வேளையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்வா்.
விழுப்புரம் காவல் துணை உள்கோட்டத்தில் அதிக காவல் நிலையங்கள் இருப்பதால், அதைப் பிரித்து புதிய உள்கோட்டம் உருவாக்க தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
பொங்கல் விழா அமைதியாக பொதுமக்கள் கொண்டாட ஏதுவாக வடக்கு மண்டலத்தில் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
ஆய்வின்போது விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எழிலரசன், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!

வலுக்கும் போர்! நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
சென்னையில் இன்று மழை பெய்யுமா?

ஹார்ட் பீட் நாயகிக்கு குவியும் வாழ்த்து!
விடியோக்கள்

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |



