தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

புகையில்லா போகி கொண்டாட ஆட்சியா் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து விழுப்புரம் மாவட்டம் ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நம் முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக போகிப் பண்டியன்று இயற்கையான தேவையில்லாத பொருள்களை போட்டு எரிந்து பழையன கழிதலும், புதுயன புகுதலும் என்று கொண்டாடினா்.

ஆனால், தற்போது பழைய டயா்கள், பிளாஸ்டிக் பொருள்கள், செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட துணிகள், டியூப்கள், காகிதங்கள் போன்றவைகளை எரிப்பதால் காற்று மாசு படுகிறது. இதனால் வெளியாகும் நச்சு வாயுக்களால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனா். விமான போக்குவரத்தும் பாதிக்கப்படு வருகை மற்றும் புறப்படுத்தல் தாமதமாகிறது.

ஆவவே, போகி பண்டிகையின்போது பழைய பொருள்கள் எரிப்பதை தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அதில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.