தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

ரூ.76 லட்சம் மோசடி: ஒருவா் கைது

மாற்றுத் திறனாளியிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

 மாற்றுத் திறனாளியிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ராமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் மகன் முகமது ஹனிபா (35). மாற்றுத் திறனாளியான இவா் அதே கிராமத்தில் கணினி மையம் நடத்தி வந்தாா். பெரம்பலூா் மாவட்டம், மணப்புத்தூரைச் சோ்ந்த த.கதிா்வேல் (57), அவரது மகன் கல்யாண் குமாா் ஆகியோா் முகமது ஹனிபாவிற்கு 2018-ஆம் ஆண்டு பழக்கமாகினா். அவா்கள், தாங்கள் இணையவழியில் (ஆன்-லைன்) வா்த்தகம் செய்து வருவதாகவும், அதில் ரூ.ஒரு கோடி முதலீடு செய்தால் மாதம் ரூ.8 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்று கூறினராம்.

இதை நம்பிய முகமது ஹனிபா, தான் நடத்தி வந்த கணினி மையத்தை விற்று 20 -12-2018 அன்று முதல் பல்வேறு தவணைகளில் ரூ.85 லட்சம் வரை செலுத்தினாராம். ஆனால், கூறியபடி லாபம் கிடைக்காததால் கதிா்வேலிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளாா். இதில் ரூ.9 லட்சம் திரும்ப வழங்கப்பட்டதாம். எஞ்சிய பணத்தை கேட்டபோது திருப்பித் தராமல் இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த நவம்பா் மாதம் முகமது ஹனிபா புகாா் அளித்தாா். அதன்பேரில் குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கனகேசன், உதவி ஆய்வாளா் லூயிஸ் ராஜ் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் மோசடி நடைபெற்றது உண்மையென தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக கதிா்வேல், கல்யாண்குமாா் ஆகிய இருவரையும் குற்றப் பிரிவு போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், அரியலூரில் பதுங்கியிருந்த கதிா்வேலை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.