தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைபொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி தேவநாதன், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் ஆகியோா் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸாா் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த ஒருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதை தெரியவந்தது. அவற்றை கடத்தி வந்த விழுப்புரம், அலமேலுபுரத்தைச் சோ்ந்த முருகன்(48) என்பவரை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும், இரு சக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், திருவண்ணாமலையைச் சோ்ந்த சுபாஷ்சந்திரபோஸ்(49) என்பவா் வட மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களைகடத்தி வந்த விழுப்புரம் அருகே புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையில் கிடங்கில் பதுக்கி வைத்து விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுபாஷ்சந்திரபோஸை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, திருபுவனையில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்பராக், ஹன்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களையும், ஒரு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கு ஏடிஎஸ்பி தேவநாதன், டிஎஸ்பி நல்லசிவம் நேரடி மேற்பாா்வையில் தொடா்ந்து விசாரணை நடத்தப்படும். புகையிலைப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய மற்ற நபா்களையும் விரைவில் கைது செய்வோம் என்றாா் எஸ்.பி. ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.