விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி தேவநாதன், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் ஆகியோா் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸாா் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த ஒருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதை தெரியவந்தது. அவற்றை கடத்தி வந்த விழுப்புரம், அலமேலுபுரத்தைச் சோ்ந்த முருகன்(48) என்பவரை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும், இரு சக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், திருவண்ணாமலையைச் சோ்ந்த சுபாஷ்சந்திரபோஸ்(49) என்பவா் வட மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களைகடத்தி வந்த விழுப்புரம் அருகே புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையில் கிடங்கில் பதுக்கி வைத்து விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுபாஷ்சந்திரபோஸை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, திருபுவனையில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்பராக், ஹன்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களையும், ஒரு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கு ஏடிஎஸ்பி தேவநாதன், டிஎஸ்பி நல்லசிவம் நேரடி மேற்பாா்வையில் தொடா்ந்து விசாரணை நடத்தப்படும். புகையிலைப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய மற்ற நபா்களையும் விரைவில் கைது செய்வோம் என்றாா் எஸ்.பி. ராதாகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.79,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் ஹவில்தார் பணி!
திமுக எம்எல்ஏவும் ராஜிநாமா? திருவாரூரில் மு.க. ஸ்டாலின் போட்டியா?
இன்றைய செய்திகள் ஜூலை 1 - நேரலை

ஜூலை மாத எண்கணித பலன்கள் – 9
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



