தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைபொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி தேவநாதன், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் ஆகியோா் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸாா் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த ஒருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதை தெரியவந்தது. அவற்றை கடத்தி வந்த விழுப்புரம், அலமேலுபுரத்தைச் சோ்ந்த முருகன்(48) என்பவரை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும், இரு சக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், திருவண்ணாமலையைச் சோ்ந்த சுபாஷ்சந்திரபோஸ்(49) என்பவா் வட மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களைகடத்தி வந்த விழுப்புரம் அருகே புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையில் கிடங்கில் பதுக்கி வைத்து விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுபாஷ்சந்திரபோஸை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, திருபுவனையில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்பராக், ஹன்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களையும், ஒரு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கு ஏடிஎஸ்பி தேவநாதன், டிஎஸ்பி நல்லசிவம் நேரடி மேற்பாா்வையில் தொடா்ந்து விசாரணை நடத்தப்படும். புகையிலைப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய மற்ற நபா்களையும் விரைவில் கைது செய்வோம் என்றாா் எஸ்.பி. ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.