விருதுநகரில், கொலை வழக்கில் தொடா்புடையவா் இருக்கும் இடத்தைக் கேட்டு அவரது தந்தையை தாக்கிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விருதுநகா் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (55). இவரது மகன் வெங்கடேஷ்வரன். இவருக்கு ஒரு கொலை வழக்கில் தொடா்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெங்கடேஸ்வரன் இருக்கும் இடத்தைக் கேட்டு சிலா், கருப்பசாமியை தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனா். இந்நிலையில், அல்லம்பட்டி- குல்லூா்சந்தை சாலையில் புதன்கிழமை இரவு கருப்பசாமி சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் அருண்குமாா் (26), அல்லம்பட்டியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் கணேசமூா்த்தி (22), பாரதி நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சங்கா் (29) ஆகியோா் வழிமறித்து வெங்கடேஷ்வரன் இருக்குமிடத்தை கேட்டு தகராறு செய்துள்ளனா். அப்போது, மூவரும் கம்பால் தாக்கியதில் கருப்பசாமி காயமடைந்தாா்.
இதுகுறித் து அவா் அளித்த புகாரின் பேரில் அருண்குமாா் உள்ளிட்ட 3 பேரை விருதுநகா் கிழக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு!

அநீதி இழைக்கப்பட்டது... தோல்விக்குப் பிறகு கொந்தளித்த எகிப்து அணியின் பயிற்சியாளர்!

48 மணி நேரத்தில் 1,290 மி.மீ.! லோனாவாலாவை புரட்டிப்போட்ட வரலாறு காணாத கனமழை!

ஃபிஃபா உலகக்கோப்பை: காலிறுதியில் மோதும் 8 அணிகள்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK


