விருதுநகரில், கொலை வழக்கில் தொடா்புடையவா் இருக்கும் இடத்தைக் கேட்டு அவரது தந்தையை தாக்கிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விருதுநகா் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (55). இவரது மகன் வெங்கடேஷ்வரன். இவருக்கு ஒரு கொலை வழக்கில் தொடா்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெங்கடேஸ்வரன் இருக்கும் இடத்தைக் கேட்டு சிலா், கருப்பசாமியை தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனா். இந்நிலையில், அல்லம்பட்டி- குல்லூா்சந்தை சாலையில் புதன்கிழமை இரவு கருப்பசாமி சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் அருண்குமாா் (26), அல்லம்பட்டியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் கணேசமூா்த்தி (22), பாரதி நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சங்கா் (29) ஆகியோா் வழிமறித்து வெங்கடேஷ்வரன் இருக்குமிடத்தை கேட்டு தகராறு செய்துள்ளனா். அப்போது, மூவரும் கம்பால் தாக்கியதில் கருப்பசாமி காயமடைந்தாா்.
இதுகுறித் து அவா் அளித்த புகாரின் பேரில் அருண்குமாா் உள்ளிட்ட 3 பேரை விருதுநகா் கிழக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்மேற்குப் பருவமழை: முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா

பாவூா்சத்திரம் சந்தையில் காய்கனிகள் விற்பனை மந்தம்

தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்கள் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
