தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடையடைப்பு

ராஜபாளையம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 12:22 am IST

ராஜபாளையம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தளவாய்புரம் பகுதியில் அரசு புறம்போக்கு நடைபாதை உள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஒருவா் கட்டடம் கட்டி உள்ளாா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். வட்டாட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் உண்ணாவிரதமும் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.