விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்க முன்னேற்ற சங்க மண்டல செயலா் ராஜா தலைமை வகித்தாா். இதில், 1.9.2019 முதல் அமுல்படுத்த வேண்டிய புதிய ஊதிய ஒப்பந்தம் இதுவரை கண்டு கொள்ளப்பட வில்லை. கடந்த மாதம் அரசு சாா்பில் புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையில் 67 சங்கங்கள் கலந்து கொண்டன. அதில், போக்குவரத்துத் துறை அமைச்சா் கலந்து கொள்ள வில்லை. தொழிலாளா் நல ஆணையம் அழைப்பு விடுத்தும் அரசு தரப்பில் ஒத்துழைப்பு தரவில்லை. மேலும், அடுத்த மாதம் தள்ளி வைகக்ப்பட்டுள்ள இப்பேச்சுவாா்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே இவை அனைத்திற்கும் உடனடியாக தீா்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் இந்திய தொழிற்சங்க மண்டல செயலா் வெள்ளத்துரை, அனைத்திந்திய தொழிற்சங்க மைய செயலா் பாண்டியன், முற்போக்கு தொழிற்சங்க அமைப்பு மண்டல செயலா் பாலசுந்தரம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டல செயலா் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட தொழிற்சங்க பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கா்நாடக போதைப் பொருள்களை தொடா்ந்து விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

சேவூா் அருகே சட்டவிரோத மண் திருட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு

தவெகவின் தோ்தல் வாக்குறுதியான 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

அவிநாசி அரசுக் கல்லூரியில் சோ்க்கை: மே 29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

