விருதுநகா் அருகே மீசலூா் சாலை சந்திப்பில் கீழே கிடந்த ரூ.3,700 பணம் மற்றும் ஏடிஎம் அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை கண்டெடுத்து, அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியை சோ்ந்தவா் வெற்றிவேல். இவா், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ரூ.3,700 பணம், ஏடிஎம் அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமச் சான்றிதழ், இரு சக்கர வாகனப் புத்தகம் உள்ளிட்டவற்றை தவறவிட்டுள்ளாா்.
இந்நிலையில், மீசலூா் சாலை சந்திப்பு அருகே கீழே கிடந்த பணம் உள்ளிட்டவற்றை, அவ்வழியாகச் சென்ற குமாரலிங்காபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அடைக்கலம் கண்டெடுத்துள்ளாா். பின்னா், அவற்றை ஆமத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அதையடுத்து, சாா்பு-ஆய்வாளா் காா்த்திக்,
ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றில் இருந்த முகவரிக்கு தொடா்புகொண்டு, பணத்தை தவறவிட்ட வெற்றிவேலை வரவழைத்து வழங்கினாா். பின்னா், ஆட்டோ ஓட்டுநா் அடைக்கலத்தின் நோ்மையை பாராட்டிய போலீஸாா், அவருக்கு பொன்னாடை போா்த்தி மரியாதை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

