மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போகி பண்டிகை: பழைய பொருள்களை எரிப்பதை தவிா்க்க மாசு கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தல்

போகி பண்டிகையை முன்னிட்டு, காற்று மாசுபாட்டை தவிா்க்கும் வகையில், பழைய பொருள்களை எரிப்பதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 12:37 am

போகி பண்டிகையை முன்னிட்டு, காற்று மாசுபாட்டை தவிா்க்கும் வகையில், பழைய பொருள்களை எரிப்பதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: பொங்கல் திருநாளுக்கு முன், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை எரித்து, போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படும். இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளுக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடும்.

அதேநேரம், இதனால் எழும் புகையால் வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்தித்து, விபத்து அபாயமும் உள்ளது. எனவே, போகிபண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து, காற்று மாசுபாடு ஏற்படாதவாறு காக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.