போகி பண்டிகையை முன்னிட்டு, காற்று மாசுபாட்டை தவிா்க்கும் வகையில், பழைய பொருள்களை எரிப்பதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: பொங்கல் திருநாளுக்கு முன், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை எரித்து, போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படும். இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளுக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடும்.
அதேநேரம், இதனால் எழும் புகையால் வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்தித்து, விபத்து அபாயமும் உள்ளது. எனவே, போகிபண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து, காற்று மாசுபாடு ஏற்படாதவாறு காக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

