விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள அருள்மிகு சீரடி சாய்பாபா கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்புப் பிரார்த்தனையுடன் வழிபாடு நடைபெற்றது.
பந்தல்குடியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அன்பு மாடல் நகரில் உள்ள அருள்மிகு சீரடி சாய்பாபா கோவிலில் தைப்பொங்கல் தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டையடுத்து மாட்டுப்பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமையும் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதன்படி பகல் ஆரத்தி வழிபாடு நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. சந்நிதானத்திலும், வளாகத்திலும் அழகிய வண்ண மலர்கள் கொண்டு மாடும் பொங்கலும் வரைபடங்களாக, கோலங்களாக இடப்பட்டிருந்தது.
பக்தர்கள் பல்வேறு வித மலர்கள் மற்றும் மலர் மாலைகளையும்,பழங்கள், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, இனிப்புகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பொருட்களையும் அருள்மிகு பாபாவிற்குப் படைத்து வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
பாபாவிற்கு உகந்த பக்திப் பாடலைப் பாடியபடி பக்தர்கள் வழிபட, தீப, தூப ஆரத்தியும், மலர்களால் அர்ச்சித்து, உணவு படைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் வழிபாடு நடைபெற்றது.
வழிபாட்டு நிறைவில் பக்தர்களின் வேண்டுகோள் நிறைவேறவும்,உலக நன்மை வேண்டியும் சிறப்பு 3 நிமிட தியானமும் நடைபெற்றது. பின்னர் வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மலர் பிரசாதம் மற்றும் அன்னதானம் அளிக்கப்பட்டது.
இவ்வழிபாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளரும், கோவில் நிர்வாகியுமான தொழிலதிபர் வி.சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்

ஆப்கனுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்ப்பு!

உ.பி.: அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

சால்மன் மீன்கள் சென்னையில் கிடைக்குமா? தமிழ்ப் பெயர் இதுவா?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



