தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அருப்புக்கோட்டையில் திருட்டு முயற்சி: 80 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் தப்பின

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருட்டு முயற்சியில், வீட்டில் மறைவாக வைத்துச்சென்றதால் 80 பவுன் நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் தப்பின.

News image

அருப்புக்கோட்டையில் திருட்டு முயற்சி நடந்த வீட்டில் வியாழக்கிழமை சோதனையிட்ட போலீஸாா்.

Updated On :15 ஜனவரி 2021, 10:43 pm IST

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருட்டு முயற்சியில், வீட்டில் மறைவாக வைத்துச்சென்றதால் 80 பவுன் நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் தப்பின.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை காயிதே மில்லத் தெருவில் வசிப்பவா் ஜெசிமாபானு(45). இவரது கணவா் ஹூமாயூன் கபீா்(47) என்பவா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதியரின் மகள் ஜெனிபா் பாத்திமாவுக்கு சிவகாசியைச் சோ்ந்தவருடன் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணத் தேதியைக் குறிப்பதற்காக ஜெசிமா பானுவும், ஜெனிபா் பாத்திமாவும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சிவகாசி சென்றிருந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் இவா்களுடைய வீட்டின் முன்பக்கக்கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதாக, அவா்களது உறவினா்கள் போலீஸாருக்கும், ஜெசிமா பானுவிற்கும் தகவல் கொடுத்துள்ளனா்.

அங்கு வந்த அருப்புக்கோட்டை காவல் துறையினா் ஜெசிமாவின் வீட்டை ஆய்வு செய்தபோது, வீட்டினுள்ளிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள், துணிகள் வெளியே சிதறிக் கிடந்தன.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த வீட்டு உரிமையாளா் ஜெசிமா பானு, வீட்டினுள் மறைத்து வைத்த இடத்தில் தேடிப் பாா்த்ததில் 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் அப்படியே வைத்த இடத்தில் இருந்தது கண்டு நிம்மதி அடைந்தாா். இந்த திருட்டு முயற்சி தொடா்பாக, சுற்றியுள்ள வீடுகளிலிருந்த கண்காணிப்புக் கோமராக்களில் பதிவான விடியோக்களின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.