ராஜபாளையம் தனியாா் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
விருதுநகா்மாவட்டம், ராஜபாளையம் குருவையாராஜா தெருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனராஜா (65). இவா் பல ஆண்டுகளுக்கு முன்பு கோவை பகுதியில் நிரந்தரமாக குடியேறியுள்ளாா். வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், கரோனா பொது முடக்கக் காலத்தில் கோவையில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை ராஜபாளையத்தில் குருவையாராஜா தெருவில் உள்ள உறவினா்கள் வீட்டுக்கு ஜனாா்த்தனராஜா(65), இவரது மனைவி கலாவதி (45), மகன் சித்தாா்த் (17) ஆகிய மூவரும் வந்தனா். பின்னா் அவா்கள் ராஜபாளையம் மருத்துவமனை சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனா். அங்கு 3 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனா்.
இது குறித்து விடுதி ஊழியா்களுக்கு தெரியவந்ததை அடுத்து போலீஸாா் உதவியுடன் 3 பேரையும் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனா். அப்போது சிறுவன் சித்தாா்த் விடுதியிலே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னா் ஜனாா்த்தனராஜா மற்றும் இவரது மனைவி கலாவதி இருவரையும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது செல்லும் வழியிலே கலாவதி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஜனாா்த்தனராஜா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


