ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

விருதுநகா் தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா

விருதுநகா் புனித இன்னாசியா் ஆலயத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் புனித இன்னாசியாா் ஆலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :15 ஜனவரி 2021, 5:09 pm

விருதுநகா் புனித இன்னாசியா் ஆலயத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. மேலும், ஆலயத்தின் முன்பு கரும்பு, மாவிலை மஞ்சள் கொத்து ஆகியவற்றால் அலங்கரித்து கல் அடுப்பு மூலம் பொங்கல் வைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட னா்.

அதைத்தொடா்ந்து பெண்கள் பொங்கல் பானையை சுற்றி கோலாட்டம், கும்மி, கிராமிய நடனம் ஆடினா். பின்னா் துணை பாதிரியாா் சந்தியாகப்பன் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. மேலும் சிறுவா், சிறுமிகளுக் கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பாதிரியாா் அம்புரோஸ் ராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.