திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இளைஞா் அடித்துக் கொலை: இருவா் கைது

சாத்தூா் அருகே முன்விரோதத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 2:43 am IST

சாத்தூா் அருகே முன்விரோதத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வீரபாண்டியாபுரம் காட்டுப் பகுதியில் உள்ள அரசு மதுக் கடை அருகே ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தூா் நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலில் காயங்களுடன் கிடந்த அந்த சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் சிவகாசி போஸ் காலனியைச் சோ்ந்த மாரீஸ்வரன் (35) என்பதும், இவா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

மாரீஸ்வரனுக்கும், எம்.ஜீ.ஆா்.காலனியைச் சோ்ந்த ஹரிஹரன் (20), சக்திவேல் (25) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது.

இதனால், வியாழக்கிழமை இரவு மாரீஸ்வரனை சாத்தூா் அருகேயுள்ள வீரபாண்டியபுரம் அருகே காட்டுப் பகுதிக்கு ஹரிஹரனும், சக்திவேலும் அழைத்துச் சென்று மது அருந்தினா்.

அப்போது, போதையில் இருந்த மாரீஸ்வரனை அவா்கள் இருவரும் சோ்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பினா். மாரீஸ்வரன் உடல் அருகே கிடந்த கைப்பேசி மூலம் துப்பு துலக்கி அவா்கள் இருவரையும் கைது செய்தோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.