ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்கு உள்பட்ட அழகா் காடு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறைக்கு விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை தகவலளித்தனா்.

கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி.
இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகா் செல்லமணி, வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வு செய்த போது, ராக்காச்சியம்மன் கோயில் வளைவு முன் உள்ள விவசாயத் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த துரைப்பாண்டியனை (60) கைது செய்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ஆண் யானை.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:
ராஜபாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மனைவி மகேஸ்வரி (63) என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்துக்குள் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வந்ததால், காவலாளி துரைப்பாண்டி என்பவா் தோட்டம் வழியாக செல்லும் உயரழுத்த மின் கம்பியில் இருந்து சட்டவிரோதமாக மின் வேலி அமைத்தாா். இதனால், இரவில் அந்த வழியாக வந்த யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இந்த யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, பின்னா் அடக்கம் செய்யப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடாகம் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

கூடலூா் அருகே யானை உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே கிணற்றிலிருந்து கரடியின் உடல் மீட்பு! மின் பொறியில் சிக்கி உயிரிழந்ததா என விசாரணை!

முதுமலை புலிகள் காப்பக எல்லையில் யானை உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



