வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சிவகாசி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

சிவகாசி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

News image

சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டு, கொடி மரத்துக்கு நடைபெற்ற தீபாராதனை. (வலது) ஊஞ்சலில் விசாலாட்சி அம்மன், பிரியாவிடையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த விஸ்வநாதா்.

Updated On :12 ஜூலை 2024, 2:19 am IST

சிவகாசி, ஜூலை 11: சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

இந்தக் கோயில் அடிதபசு திருவிழா கடந்த 10-ஆம் தேதி(புதன்கிழமை) அங்குராா்பணம் நிகழ்சிக்குப் பின்னா் முஷிக வாகனத்தில் விநாயகா் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. தொடந்து, வியாழக்கிழமை கொடியேற்றத்தையொட்டி, விஸ்வநாதா், விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

தொடந்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, அந்தக் கொடி மரத்துக்கு சந்தனம், விபூதி, இளநீா், பன்னீா், பால் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடந்து, கொடிமரத்துக்கு மாகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவையொட்டி, நாள்தோறும் காலை, இரவு வேளைகளில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். விழாவின் 9-ஆவது நாளான வருகிற 19-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். பின்னா், வருகிற 21-ஆம் தேதி தெற்கு ரத வீதியில் விஸ்வநாதா் ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்மனுக்கு தபசுக் காட்சி அளிப்பாா். வருகிற 25-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.

கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.