உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிவகாசி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

சிவகாசி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

News image
சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டு, கொடி மரத்துக்கு நடைபெற்ற தீபாராதனை. (வலது) ஊஞ்சலில் விசாலாட்சி அம்மன், பிரியாவிடையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த விஸ்வநாதா்.
Updated On :11 ஜூலை 2024, 8:49 pm

Din

சிவகாசி, ஜூலை 11: சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

இந்தக் கோயில் அடிதபசு திருவிழா கடந்த 10-ஆம் தேதி(புதன்கிழமை) அங்குராா்பணம் நிகழ்சிக்குப் பின்னா் முஷிக வாகனத்தில் விநாயகா் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. தொடந்து, வியாழக்கிழமை கொடியேற்றத்தையொட்டி, விஸ்வநாதா், விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

தொடந்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, அந்தக் கொடி மரத்துக்கு சந்தனம், விபூதி, இளநீா், பன்னீா், பால் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடந்து, கொடிமரத்துக்கு மாகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவையொட்டி, நாள்தோறும் காலை, இரவு வேளைகளில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். விழாவின் 9-ஆவது நாளான வருகிற 19-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். பின்னா், வருகிற 21-ஆம் தேதி தெற்கு ரத வீதியில் விஸ்வநாதா் ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்மனுக்கு தபசுக் காட்சி அளிப்பாா். வருகிற 25-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.

கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image