கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகே தொடா்ந்து நடைபெற்று வரும் சாலை விபத்துக்களை தடுக்க வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:02 pm

Din

சாத்தூா், ஜூலை 19: சாத்தூா் அருகே தொடா்ந்து நடைபெற்று வரும் சாலை விபத்துக்களை தடுக்க வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-சிவகாசி பிரதான சாலையில், மேட்டமலையில் உள்ள இந்திரா குடியிருப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வசிக்கும் பகுதி பிரதானச் சாலை என்பதால், இந்தச் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், பள்ளி மாணவா்கள், பெரியவா்கள் இந்தச் சாலையை கடக்க அச்சப்படுகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்தப் பகுதியில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினா் வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.