
Updated On :16 மே 2024, 8:01 pm

வத்திராயிருப்பு அருகே கைப்பேசியை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் சாலமுத்து (60). இவா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 14-ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் பணி முடிந்து தூங்கினாா். எழுந்து பாா்த்த போது, இவரது கைப்பேசியையும், அவரது நண்பரின் கைப்பேசியையும் காணவில்லை.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து, வத்திராயிருப்பு மேலப்பாளையத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பாண்டியை (37) கைது செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...