கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :13 ஆகஸ்ட் 2025, 3:39 am IST

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் ஊராட்சி, சுப்ரீம் நகா் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த செண்பகராஜ் (25) என்பவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிவகாசி நகா் போலீஸாா் அவரைக் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கருமன்கோயில் பகுதியில் கட்டளைப்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (24) சுமாா் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.