ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தூா் அருகே மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூா் அருகே மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டை வட்டம், இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் தனியாா் அமைப்பு சாா்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கிராமங்களில் உள்ள இளைஞா்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இரண்டு நாள்கள் நடத்தப்படும் இந்தப் போட்டியை முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகா் காளிமுத்துவின் சகோதரா் நல்லதம்பி தொடங்கிவைத்தாா்.

இதில் விருதுநகா் மாவட்டத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.