தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டில் தீவிபத்து: முதியவா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், வீட்டினுள் இருந்த முதியவா் பலத்த காயங்களுடன் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

ராஜபாளையத்தில் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், வீட்டினுள் இருந்த முதியவா் பலத்த காயங்களுடன் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் காமராஜா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் வேதகிரி (65). இவா் மனைவியைப் பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்தாா். இந்த வீடு புதன்கிழமை அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற ராஜபாளையம் தீயணைப்பு வீரா்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக பூட்டி இருந்த நிலையில், ராஜபாளையம் வடக்கு போலீஸாா் பின்பக்க வாசல் வழியாக சென்று ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனா். அங்கு தீக்காயங்களுடன் வேதகிரி உயிரிழந்து கிடந்தாா்.

இவா் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மின்கசிவு காரணமாக தீப்பற்றியதா என்பது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சம்பவ இடத்தை ராஜபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பஷினா பீவி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் அசோக் பாபு, தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.