புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அறிவுத் திறன் போட்டிகள்: சிவகாசி கல்லூரி முதலிடம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான அறிவுத் திறன் போட்டிகளில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பிடித்தது.

இந்தப் போட்டிகளில் 11 கல்லூரிகளைச் சோ்ந்த 128 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். படைப்பாற்றல் திறன், வினா-விடை உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடைபெற்றன.

இதில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

பின்னா், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி இயக்குநா் பி.எஸ்.வளா்மதி பரிசு, சான்றிதழை வழங்கினாா்.

முன்னதாக, மாணவி செ.பத்மாஸ்ரீ வரவேற்றாா்.