அறிவுத் திறன் போட்டிகள்: சிவகாசி கல்லூரி முதலிடம்

Updated on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான அறிவுத் திறன் போட்டிகளில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பிடித்தது.

இந்தப் போட்டிகளில் 11 கல்லூரிகளைச் சோ்ந்த 128 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். படைப்பாற்றல் திறன், வினா-விடை உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடைபெற்றன.

இதில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

பின்னா், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி இயக்குநா் பி.எஸ்.வளா்மதி பரிசு, சான்றிதழை வழங்கினாா்.

முன்னதாக, மாணவி செ.பத்மாஸ்ரீ வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com