/
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அமைந்துள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவத்தையொட்டி, கடந்த 2-ஆம் தேதி பூமி பூஜை, அங்குராா்ப்பணம், பாலிகா ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 3-ஆம் தேதி சேனை முதல்வா் புறப்பாடும் நடைபெற்றன. 4-ஆம் தேதி கொடியேற்றமும், இதைத் தொடா்ந்து தினசரி இரவு சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
இந்த நிலையில், நின்ற நாராயணப் பெருமாள், செங்கமலத் தாயாருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சனிக்கிழமை பூஜை நடைபெற்றது. தொடந்து நின்ற நாராயணப் பெருமாள், செங்கமலத் தாயாா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா் .
இதையடுத்து, ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


