இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பள்ளியில் குழந்தைகள் தின விழா

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:29 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு மாறுவேடப் போட்டியும், 4, 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு படம் வரைதல் போட்டியும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டியும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியா் (பொ) பா்னபாஸ் தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா்கள் சுரேஷ் தளியத், ஜவஹா், அமல்ராஜ், ஜெபக்குமாா், ஆண்டோ கபிதா போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கினா். இம்மானுவேல் நன்றி கூறினாா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியா் பிரின்ஸ் டேவிட் செய்தாா்.