47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிளவக்கல் அணையில் முதல்போக சாகுபடிக்கு நவ.17 முதல் தண்ணீா் திறப்பு

வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் அணையிலிருந்து முதல்போக சாகுபடி, கண்மாய் பாசனத்துக்கு வருகிற 17-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:44 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் அணையிலிருந்து முதல்போக சாகுபடி, கண்மாய் பாசனத்துக்கு வருகிற 17-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய்க் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா் மழையால் 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை கடந்த மாதம் 20-ஆம் தேதி 41 அடியை தாண்டியது. இதையடுத்து, அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது. பின்னா், அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் நீா் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் மீண்டும் அணையின் நீா்மட்டம் 41 அடியை தாண்டியது.

இதையடுத்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிளவக்கல் அணையிலிருந்து வருகிற 17-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.