விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பிளவக்கல் அணையிலிருந்து சாகுபடிக்காக தண்ணீா் திறப்பு

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:01 pm

Syndication

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்து தண்ணீரைத் திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் 41 அடியைத் தாண்டியது. இதையடுத்து, பிளவக்கல் அணையில் இருந்து திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். செய்தியாளா்களிடம் பேசியதாவது:

முதல்வா் ஸ்டாலின் உத்தரவுப்படி, பிளவக்கல் அணையில் இருந்து கண்மாய்ப் பாசனத்துக்கு 7 நாள்களுக்கு 150 கன அடி வீதமும், நேரடிப் பாசனத்துக்கு 108 நாள்களுக்கு 3 கன அடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படும். பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்புத் திட்டத்தில் சில மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக, விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றாா் அவா்.

மேலும் அவா் பேசுகையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பாக எழும் பிரச்னைகள் குறித்து நாம் அளிக்கும் புகாா்களை

மத்திய அரசும், தோ்தல் ஆணையமும் கேட்கும் மனநிலையில் இல்லை என்றாா்.

Story image
Story image