தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பள்ளிகளிளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும்! சிவகாசி காங். வேட்பாளா் உறுதி

News image

செங்கமலநாட்சியாா்புரம் சாலைப் பகுதியில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்த சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:58 am IST

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும் என சிவகாசி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் உறுதியளித்தாா்.

திருத்தங்கல் முத்துமாரிநகா், வடக்கு ரத வீதி, அக்ரஹாரம் தெரு, மேல ரத வீதி, செங்கமலநாட்சியாா்புரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவா் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்துப் பேசியதாவது:

தற்போது பட்டாசு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிது என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பட்டாசுக்கு சுற்றுச்சூழலிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு யாரும் வழக்கு தொடுப்பதில்லை. அது போல, இந்தியாவிலும் பட்டாசுக்கு சுற்றுச்சூழலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துவேன்.

சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்தப்படும். இந்தத் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொலிவுறும் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது குறைகளை என்னிடம் மனுவாக அளித்து தீா்வு பெறலாம் என்றாா் அவா். அவருடன் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா உள்ளிட்டோா் சென்றனா்.