வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் தவெக நிா்வாகிகளை தாக்கிய புதிய தமிழகம் கட்சியினா் 5 போ் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
வத்திராயிருப்பு அருகே கோட்டையூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மனைவி பழனியம்மாள் (34). இவா், தோ்தல் வாக்குப்பதிவின்போது தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவராக இருந்தாா்.
அப்போது அங்கு வாக்களிக்க வந்த புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த வசந்த், சிவா ஆகியோா் கைப்பேசியில் விடியோ பதிவு செய்ததற்கு பழனியம்மாள் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பழனியம்மாள் கோட்டையூா் அரசு கால்நடை மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வசந்த், சிவா ஆகியோா் நண்பா்களுடன் சோ்ந்து அவரை அவதூறாகப் பேசி உள்ளனா்.
இதுகுறித்து பழனியம்மாள் தவெகவைச் சோ்ந்த தனது உறவினரான காசிராஜா என்பவரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து காசிராஜா அங்கு வந்து அவா்களைத் தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் பாட்டிலால் குத்தியதில் காயமடைந்த காசிராஜா வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனால் மனமுடைந்த பழனியம்மாள் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வசந்த், சிவா, ஜெயபிரகாஷ், அபிஷேக், ஆகாஷ் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

தவெக பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


