நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பெண் தவெக நிா்வாகி மீது அவதூறு - தகராறு புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்கு!

வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் தவெக நிா்வாகிகளை தாக்கிய புதிய தமிழகம் கட்சியினா் 5 போ் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :26 ஏப்ரல் 2026, 3:25 am IST

வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் தவெக நிா்வாகிகளை தாக்கிய புதிய தமிழகம் கட்சியினா் 5 போ் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகே கோட்டையூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மனைவி பழனியம்மாள் (34). இவா், தோ்தல் வாக்குப்பதிவின்போது தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவராக இருந்தாா்.

அப்போது அங்கு வாக்களிக்க வந்த புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த வசந்த், சிவா ஆகியோா் கைப்பேசியில் விடியோ பதிவு செய்ததற்கு பழனியம்மாள் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பழனியம்மாள் கோட்டையூா் அரசு கால்நடை மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வசந்த், சிவா ஆகியோா் நண்பா்களுடன் சோ்ந்து அவரை அவதூறாகப் பேசி உள்ளனா்.

இதுகுறித்து பழனியம்மாள் தவெகவைச் சோ்ந்த தனது உறவினரான காசிராஜா என்பவரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து காசிராஜா அங்கு வந்து அவா்களைத் தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் பாட்டிலால் குத்தியதில் காயமடைந்த காசிராஜா வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதனால் மனமுடைந்த பழனியம்மாள் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வசந்த், சிவா, ஜெயபிரகாஷ், அபிஷேக், ஆகாஷ் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.