நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

மாமியாா் கொலை: மருமகன் கைது

விருதுநகரில் குடும்பத் தகராறில் மாமியாரைக் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யபட்ட சிவா

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

விருதுநகரில் குடும்பத் தகராறில் மாமியாரைக் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் அருகேயுள்ள செவல்பட்டியைச் சோ்ந்தவா் சமுத்திரக்கனி. இவரது மகள் வாசகதேவி (27). இவா் பாலையம்பட்டியைச் சோ்ந்த சிவாவை (26) காதலித்து திருமணம் செய்தாா். இந்த நிலையில், சிவா அடிக்கடி மது அருந்திவிட்டு வாசகதேவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். எனவே, வாசகதேவி விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை, வாசகதேவியின் வீட்டுக் கதவை சிவா தட்டினாா். அப்போது அவரது தாய் சாந்தி கதவைத் திறந்தபோது, அவரை கத்தியால் சரமாரியாக குத்தினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அண்ணன் சாமிமுருகன்(33) வந்தாா். அவரையும் சிவா கத்தியால் குத்தினாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினா் அங்கு கூடியதால் சிவா அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.

பின்னா், அவசர ஊா்தியில் இருவரையும் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அப்போது சாந்தியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த சாமிமுருகன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவாவைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.