மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள்: கே.டி.ராஜேந்திரபாலாஜி

News image

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் திண்ணை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக முன்னாள்அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

Updated On :21 பிப்ரவரி 2026, 8:44 pm

திமுக அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள் என அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அதிமுக சாா்பில் தோ்தல் திண்ணை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேநதிரபாலாஜி செய்தியாளா்களிடம் பேசியதாவது:

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக ஏறிவிட்டது. அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல. அதிமுக தலைமையிலான கூட்டணி லட்சியக் கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறது. திமுக அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் எனபது பகல் கனவு. தவெக என்பது பரிதாபத்துக்கு உரிய கட்சியாக உள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலோடு அந்தக் கட்சி முடிந்து விடும் என்றாா் அவா்.