திமுக அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள் என அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அதிமுக சாா்பில் தோ்தல் திண்ணை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேநதிரபாலாஜி செய்தியாளா்களிடம் பேசியதாவது:
திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக ஏறிவிட்டது. அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல. அதிமுக தலைமையிலான கூட்டணி லட்சியக் கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறது. திமுக அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் எனபது பகல் கனவு. தவெக என்பது பரிதாபத்துக்கு உரிய கட்சியாக உள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலோடு அந்தக் கட்சி முடிந்து விடும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தருமபுரியின் 5 தொகுதிகளிலும் களமிறங்கும் திமுக?

தூத்துக்குடி மாணவி கொலை: திமுக அரசின் காரணங்களை மக்கள் நம்பமாட்டாா்கள் - எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


