ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:36 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் முருகன் (48). இவா் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்துக்குச் சென்றபோது மதுரை சாலையில் காயல்குடி ஆற்றுப்பாலம் அருகே லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகனை அருகிலிருந்தவா்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கி சிகிச்சை பலனின்றி அவா் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வடக்கு காவல் நிலைய போலீஸாா் தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஆறுமுகச்சாமியைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.