பலி
பலிகோப்புப் படம்

பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி-போடி சாலையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

தேனி-போடி சாலையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பெயிண்டிங் தொழிலாளி ஈஸ்வரன் (45). இவா், போடியிலிருந்து தேனியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். தீா்த்தத் தொட்டி முருகன் கோயில் அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேன் ஓட்டுநா் கோடாங்கிபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த விஜய் மீது பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com