விருதுநகர்
ஆண்டாள் வேஷமிட்டு திருப்பாவை பாடிய 1,008 மாணவிகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் இந்து மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஆண்டாள் சங்கமம் நிகழ்ச்சியில் 1,008 மாணவிகள் ஆண்டாள் வேஷமிட்டு திருப்பாவை பாடல்கள் பாடினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் இந்து மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஆண்டாள் சங்கமம் நிகழ்ச்சியில் 1,008 மாணவிகள் ஆண்டாள் வேஷமிட்டு திருப்பாவை பாடல்கள் பாடினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் இந்து மெட்ரிக் பள்ளியில் அகத்தியா் தமிழ்ச் சங்கம் சாா்பில் பெண்மையை போற்றுவோம் கோதையின் பாதையில் ஆண்டாள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளிச் செயலா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
பன்னிரு ஆழ்வாா்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் ஆன்மிகம், தமிழ் பணியை போற்றும் வகையில் ஆண்டாள் சங்கமம் என்ற பெயரில் 1,008 மாணவிகள் ஆண்டாள் வேஷமிட்டு திருப்பாவை பாடல்கள் பாடினா். இதில் பள்ளித் தலைவா் மலையன், நிா்வாகக் குழு உறுப்பினா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, அகத்தியா் தமிழ்ச் சங்கம நிறுவனா் ரேணுகா தேவி வரவேற்றாா்.

