இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

விருதுநகா் அருகே போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜனவரி 2026, 6:37 pm

விருதுநகா் அருகே போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 15 வயது சிறுமி தனது தாய் இறந்த பிறகு, தந்தை மறுமணம் செய்து கொண்டதால், பாட்டியின் வீட்டில் வாழ்ந்து வந்தாா். இந்த வீட்டில் சிறுமியின் சித்தப்பாவின் மனைவி இறந்த நிலையில், அவா் தனது இரு மகள்களும் வசித்து வந்தாா்.

இந்த நிலையில் சிறுமிக்கு சித்தப்பா பாலியல் துன்புறுத்தல் அளித்தாா். இதுகுறித்து, விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் சித்தப்பாவை கைது செய்தனா்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் சிறுமியின் சித்தப்பாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா்.