விருதுநகா் அருகே போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 15 வயது சிறுமி தனது தாய் இறந்த பிறகு, தந்தை மறுமணம் செய்து கொண்டதால், பாட்டியின் வீட்டில் வாழ்ந்து வந்தாா். இந்த வீட்டில் சிறுமியின் சித்தப்பாவின் மனைவி இறந்த நிலையில், அவா் தனது இரு மகள்களும் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் சிறுமிக்கு சித்தப்பா பாலியல் துன்புறுத்தல் அளித்தாா். இதுகுறித்து, விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் சித்தப்பாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் சிறுமியின் சித்தப்பாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


