தமிழக உள்ளாட்சி தோ்தலில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.
சிவகாசியில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாணவா் சமுதாயம் பாதிக்கக் கூடாது என்பதற்காக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளாா். போராட்டத்தின் நியாயம் கருதி மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை அடிபணிந்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவா்கள் யாரும் விஜய் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என தோ்தல் பணியாற்றவில்லை. அதிமுகவில் 10 ஆண்டுகள் அமைச்சராகவும், 15 ஆண்டுகள் எம்எல்ஏ ஆகவும் இருந்து விட்டு தற்போது தவெகவில் இணைந்துவிட்டனா். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










