வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் காயமடைந்த நிலையில் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2026, 12:27 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் காயமடைந்த நிலையில் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் கருப்பசாமி என்ற தொழிலாளி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விசாரணையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்தப் புகாரின் பேரில், பட்டாசு ஆலை உரிமையாளா் திருத்தங்கல்லைச் சோ்ந்த அய்யனாா் (56) மீது வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.