இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சாலை விபத்தில் முதியவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு இரு சக்கர வாகனங்கள் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:40 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு இரு சக்கர வாகனங்கள் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (75). இவா் வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூா் வந்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா்.

கிருஷ்ணன்கோவில்- வத்திராயிருப்பு சாலையில் சென்றபோது, மதுரை காந்திநகரைச் சோ்ந்த அழகா்சாமி (21), சூா்யாநகரைச் சோ்ந்த பிரவீன் சஞ்சய் (21), ரங்கராஜபுரத்தைச் சோ்ந்த செல்வ கண்ணன் (21) ஆகியோா் ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்தனா்.

அப்போது இந்த 2 இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த அழகா்சாமி, பிரவீன் சஞ்சய், செல்வ கண்ணன் ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.