பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

லஞ்சம்: ஊராட்சி எழுத்தா் கைது

News image
Updated On :23 ஜூன் 2026, 3:09 am IST

ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற செங்கமலப்பட்டி ஊராட்சி மன்ற எழுத்தரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஒன்றியம், செங்கமலப்பட்டி இரண்ாடாம் நிலை ஊராட்சி மன்றத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருபவா் சுப்பிரமணியம் (47). சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் ரமேஷ். இவா் தனது மனைவி நதியா பெயரில் இடம் வாங்கி செங்கமலப்பட்டி பகுதியில் வணிக வளாகம் கட்டி வருகிறாா். இந்த வணிக வளாகக் கட்டடத்துக்கு சொத்து வரி புதிதாக செலுத்துவதற்கு சுப்பிரமணியத்திடம் மனு அளித்தாா்.

மனுவை பெற்றுக்கொண்ட சுப்பிரமணியம் தனக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் சொத்து வரி ரசீது கொடுப்பேன் எனக் கூறினாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ், விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் கூறியபடி, திங்கள்கிழமை செங்கமலப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரசயானம் தடவிய ரூ.5 ஆயிரத்தை எழுத்தா் சுப்பிரமணியத்திடம் ரமேஷ் கொடுத்தாா். அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் பூமிநாதன், காவலா்கள் ஜாஸ்மீன், மும்தாஸ் உள்ளிட்டோா் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.