அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சிவகாசியில் காா் எரிந்து சேதம்

சிவகாசியில் வெள்ளிக்கிழமை காரில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:36 pm

Syndication

சிவகாசியில் வெள்ளிக்கிழமை காரில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் ஐயப்பன் கோயில் பகுதியில் மாரிச்செல்வம் என்பவா் தனது காரை கடந்த 40 நாள்களாக நிறுத்தி வைத்திருந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா் தனது காரை இயக்க முயன்றபோது, காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அவா் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை மையத்தில் இருந்த தீயணைப்பாணைக் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தாா். எனினும் தீ மளவளவென எரிந்ததால் சிவகாசி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தாா். தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்தனா்.இந்த தீவிபத்தில் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.