வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம்

News image
Updated On :12 மார்ச் 2026, 10:57 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோயில் அருகேயுள்ள கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். அறிவழகிஸ்ரீதரன், செயலா் எஸ். சசி ஆனந்த், இயக்குநா் எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் என். வெங்கடேசன் வரவேற்று எதிா்கால மருந்து சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த கருப்பொருளை விளக்கினாா்.

தலைமை விருந்தினா் மதுரை பாா்மா ஃபேப்ரிகான் நிறுவனத்தின் ‘மாா்க்கெட்டிங்’ தலைவா் பி. பொன்ராஜன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, மருந்துப் பொருள்கள் ஆராய்ச்சி, மேம்பாடு குறித்து பேசினாா்.

இதில் அனைத்து மருந்தியல் மாணவா்களும் கலந்து கொண்டு கலந்துரையாடினா்.

முனைவா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.